Last Updated : 30 Nov, 2018 08:48 AM

 

Published : 30 Nov 2018 08:48 AM
Last Updated : 30 Nov 2018 08:48 AM

ஒக்கி புயல் தாக்கி ஓராண்டு ஆகியும் மீளமுடியாத சோகம்: பயிர் இழப்பீடு பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு

ஒக்கி புயல் தாக்கி ஓராண்டைக் கடந்த பின்பும் அதில் இருந்து மீளமுடியாமல் குமரி மாவட்டம் தவிக்கிறது. விவ சாயிகள் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு முழுமையாக கிடைக்காமல் அலைக் கழிக்கப்படுகின்றனர். மீனவர்கள் கடல் தொழிலை விட்டு விலகி வருகின்றனர். மீண்டும் ஒரு பேரிடர் வந்தால் முன்னெச் செரிக்கை நடவடிக்கையாக நவீன உபகர ணங்கள் ஏதும் இல்லாத நிலை உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி இப்படி ஒரு புயல் வீசும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 29-ம் தேதி இரவு தொடங்கி மறுநாள் பகல் வரை வீசிய புயல் தென்னை, வாழை, தேக்கு, பலா, ரப்பர் என லட்சக்கணக்கான மரங்களை, வீடுகளை, விசைப்படகுகளை சூறையாடியது. கடலில் 300 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன்பிடித்த விசைப்படகு மீனவர்களின் படகுகள் மூழ்கின. இயற்கை இழப்புகளும், உயிர் இழப்புகளும் அதிகரித்தன.

187 பேர் உயிரிழப்பு

கஜா புயலின் வேகத்தைவிட, ஒக்கி புயலின் வேகம் குறைவு. ஆனால், உயிரிழப்பு அதிகம். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 162 மீனவர்கள் உயிரிழந்தனர். பயிர்கள் சேதமானதால் அதிர்ச்சியில் 25 விவசாயிகள் மரணமடைந்தனர்.

மீன்பிடி தொழிலுக்கு செல்ல ஆண்கள் எவரும் இன்றி தவிக்கும் மீனவர் குடும்பங்கள் 15-க்கும் மேல் உள்ளன. வருவாய்க்கு வழியின்றி இக்குடும்பங்கள் தவிக்கின்றன. புயலுக்குப் பின், கடல் தொழிலை விட்டு மீனவக் குடும்பங்கள் பல விலகி வருகின்றன.

தூத்தூர் பகுதி மீனவர்கள் கூறிய தாவது: உயிரிழந்த மீனவர் குடும்பங் களுக்கு அரசு நிவாரணமும், அரசு வேலையும் வழங்கினர். ஆனாலும், அவர்களின் குடும்பங்கள் சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றன. மீனவர்கள் ஆழ்கடலில் 10 முதல் 50 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து வருகி றோம். புயல் பற்றிய தகவல் முறையாக கிடைக்காவிட்டால், ஒக்கி புயல் போன்று கடலிலேயே உயிர் விடவேண்டியதுதான். எங்களுக்கு சாட்டிலைட் போன், வயர் லஸ் உபகரணங்கள் போன்றவை வழங்க வேண்டும் என்கின்றனர்.

குமரி பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது: பல ஆயிரம் ஏக்கர் விவசாயப் பயிர்களும், பசுமை மரங்களும் ஒக்கி புயலில் சேதமாயின. அவற்றை இழந்த விவசாயிகளுக்கு இதுவரை உரிய நிவாரணம் வந்து சேரவில்லை. ஆயிரக்கணக்கான தென் னைகள் விழுந்து பேரிழப்பு ஏற்பட்ட விவ சாயிகளுக்கு உரிய நிவாரணம் போய்ச் சேரவில்லை. சரிந்த தென்னைக்கு பதி லாக புதிதாக நட தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவில்லை. புயலில் இறந்த விவசாயிகள் 25 பேர் என புள்ளி விவரத்துடன் அரசிடம் வழங்கிய பின்பும் 15 பேருக்கு மட்டுமே ரூ.10 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கி உள்ளனர். உரிய நிவாரணம் கிடைக்காத 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஓராண்டாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.

கேரளாவைப் போன்று மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x