Published : 05 Nov 2018 03:07 PM
Last Updated : 05 Nov 2018 03:07 PM

கோயில் கும்பாபிஷேக விழாவில் ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: பொதுமக்கள் உற்சாகம்

கோயில் கும்பாபிஷேக விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடியதை பொதுமக்கள் கண்டு உற்சாகம் அடைந்தனர்.

கோவை கைகோலபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபட்டனர். பின்னர் விழாவில் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் சிலர் நடமாடினர். அவர்களோடு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆறுகுட்டி ஆகியோர் நடனமாடினர். அவர்களின் நடனத்தைக் கண்ட பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

அமைச்சர், எம்எல்ஏ மட்டுமல்லாமல் அங்கிருந்த அதிமுகவினரும் இணைந்து உற்சாகத்துடன் நடனமாடினர். அவர்களின் நடனத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x