Published : 22 Nov 2018 09:11 AM
Last Updated : 22 Nov 2018 09:11 AM

‘கஜா’ புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் நிதி கேட்க சென்றார்: மோடியுடன் முதல்வர் இன்று சந்திப்பு - உடனடியாக மத்திய குழுவை அனுப்ப வலியுறுத்தவும் திட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்துப் பேசுகிறார். அப்போது புயல் நிவாரணத்துக்கு அதிகமான நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார். புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும் எனவும் அப்போது அவர் வலியுறுத்துகிறார்.

தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வீசிய ‘கஜா’ புயலின் தாக்கத் தால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 40 லட்சம் தென்னை மரங்கள், பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட் டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் மக்கள் வாழ்வாதா ரத்தை இழந்து தவிக்கின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்ததால் புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இருளில் மூழ்கின.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. அமைச் சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தப் பணி களை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர்.

வீடுகளை இழந்த மக்கள் நிவா ரண முகாம்களில் தங்கவைக் கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி களை மாவட்ட நிர்வாகங்கள் செய்து கொடுக்கின்றன. புயல் நிவாரணப் பணிகளுக்கு முதல்கட்டமாக மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை தமிழக அரசு உடனடியாக விடுவித்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், பாத்திரம், துணி கள் வாங்க ரூ.3,800 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். மேலும் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகள், பகுதி அளவு சேதமான வீடுகள், தென்னை மரங்கள், பயிர்கள், மீனவர்களின் படகுகள் உள்ளிட்டவற்றுக்கும் நிவாரணம் அறிவித்தார்.

ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு

புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற் றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஹெலிகாப்ட ரில் சென்று பார்வையிட்டனர். புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை யில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர், புயலால் உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை வழங்கினார். பின்னர் கனமழை பெய்ததால், பய ணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.

இந்நிலையில், புயல் நிவா ரணம், மறுசீரமைப்புப் பணிக ளுக்கு மத்திய அரசின் நிதியை பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்துப் பேச உள்ளார். இதற்காக நேற்று மாலை 5.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 10 மணி அளவில் பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர், தமிழகத்தில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய சேதங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கிறார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள், மறுசீரமைப்புப் பணிகளுக்கு பெருமளவில் நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்க இருக்கிறார்.

வரலாறு காணாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதால் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண் டும், சேதங்களை மதிப்பிட மத்திய அரசின் சார்பில் உடனடியாக குழுவை அனுப்ப வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் வலி யுறுத்த இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் முதல்வர் பழனிசாமி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ. 1,000 கோடி விடுவிப்புக்கு அரசாணை வெளியீடு

புயல் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் அளித்த முதல்கட்ட அறிக்கையின் அடிப்படையில், நிவாரணப் பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.1,000 கோடியை உடனடியாக விடுவிக்கப்படும் என கடந்த 19-ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.1,000 கோடி ரூபாய் விடுவிக் கப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி மனித உயிரிழப்பு, கால்நடை, உடைமைகள் இழப்புகளுக்கு ரூ.205 கோடியே 87 லட்சம், சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.100 கோடி, வேளாண் பொருட்கள் சேதத்துக்கு ரூ.350 கோடி, கட்டமைப்பு வசதிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை ரூ.25 கோடி, பேரூராட்சிகளுக்கு ரூ.5 கோடி, ஊரக மேம்பாட்டுக்கு ரூ.25 கோடி, பொதுப்பணித் துறைக்கு ரூ.10 கோடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.5 கோடி, நகராட்சிகளுக்கு ரூ.5 கோடி, மாவட்ட நிர்வாகங்களுக்கு ரூ. 27 கோடியே 50 லட்சம், மீனவர்களுக்கு ரூ.41 கோடியே 63 லட்சம், மின் விநியோகத்தை சீரமைக்க ரூ.200 கோடி என மொத்தம் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x