Published : 29 Nov 2018 09:26 AM
Last Updated : 29 Nov 2018 09:26 AM

ராயப்பேட்டை தபால் நிலையத்தில் சர்வதேச பார்சல் சேவை தொடக்கம்

ராயப்பேட்டையில் உள்ள தபால் நிலையத்தில் சர்வதேச பார்சல் சேவையை சென்னை நகர அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலோக் ஓஜா நேற்று தொடங்கிவைத்தார்.

இந்திய தபால் துறை, காலத் துக்கு ஏற்றவாறு மக்கள் பயன் பெறும் வகையில் புதிய திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள தபால் நிலையத்தில் சர்வதேச பார்சல் சேவையை சென்னை நகர அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலோக் ஓஜா நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் கூறும்போது, “தமிழர்கள் உலகில் உள்ள பல் வேறு நாடுகளில் வசித்து வருகிறார் கள். குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, துபாய், சவுதி போன்ற நாடுகளில் அதிகள வில் வசித்து வருகின்றனர். எனவே, உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வசித்து வரும் மக்கள் தங்களது பொருட்களை பார்சலில் அனுப்பி பயன்பெறும் வகையில் சர்வதேச பார்சல் சேவை ராயப்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் சிறப் பான சேவையை பெற முடி யும். பொருட்களுக்கு ஏற்றவாறு ரூ.80 முதல் ரூ.275 வரை பேக்கிங் கட்டணம் வசூலிக்கப்படும். இது தவிர, நாடுகளுக்கு ஏற்றவாறு பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும்.

இங்கிருந்து 213 நாடுகளுக்கு பொருட்களை அனுப்பலாம், பெற லாம். தற்போது, இந்த வசதி தி.நகர், மயிலாப்பூர், திருவல்லிக் கேணி, தேனாம்பேட்டை, நுங்கம் பாக்கம், ராயப்பேட்டையில் இருக் கிறது. இந்த சேவை மேலும் 20 தபால் நிலையங்களுக்கு விரிவுப்படுத்தப் படும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ராயப் பேட்டை போஸ்ட் மாஸ்டர் பி.மனோ கரன், அலுவலர் ஜெ.சத்தியநாராய ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பொருட்களை அனுப்பிய வாடிக்கையாளர்கள் டி.விக்னேஷ், வேத்பிரகாஷ் ஆகியோர் கூறும் போது, ‘‘அரசு நிறுவனம் என்பதால் தபால் துறை மூலம் பார்சல் சேவை பாதுகாப்பாக இருக்கும். எங்களது பொருட்கள் எவ்வித சேதமுமின்றி, பாதுகாப்பாகவும் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், மற்ற தனியார் நிறுவனங்களை ஒப்பிடுகையில் இங்கு 50 சதவீதம் கட்டணமும் குறைவாக இருக்கிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x