Published : 21 Nov 2018 10:23 AM
Last Updated : 21 Nov 2018 10:23 AM

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கலந்த கச்சா எண்ணெய் அகற்றும் பணி தீவிரம் 

எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற் றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 9-ம் தேதி ஈராக் கில் இருந்து 24 ஆயிரம் டன் கச்சா எண்ணெய்யுடன் புறப்பட்ட எம்.டி.கோரல் ஸ்டார் என்ற கப்பல் கடந்த 14-ம் தேதி, சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலில் இருந்து குழாய் மூலம் கச்சா எண்ணெய் இறக்கும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, அதிகாலை 4 மணிக்கு திடீரென இணைப்புக் குழாய் உடைந்து, சுமார் 2 டன் அளவு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. எண்ணெய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக கப்பலை சுற்றி உடனடியாக தடுப்பு வலை அமைக் கப்பட்டது.

மேலும், கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியக் கடலோர காவல்படைக்கு சொந்தமான மாசுக் கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படும் ‘சமுத்ரா பஹ்ரேதார்’ என்ற கப்பல் விசாகப் பட்டினத்தில் இருந்து வரவழைக் கப்பட்டு நேற்று முன்தினம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இக்கப்பலுடன், மேலும் 5 கப்பல்கள் இணைந்து கச்சா எண்ணெய்யை அகற்றும் பணி யில் ஈடுபட்டுள்ளன. இந்தியக் கடலோர காவல்படையின் 6 ஹெலிகாப்டர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.

கடலில் பரவிய 5 டன் எடையுள்ள நுரைகள் அகற்றப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் நடைபெற்று வரும் இப்பணிகள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவ தாக இந்தியக் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.கடலில் எண்ணெய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக கப்பலை சுற்றி உடனடியாக தடுப்பு வலை அமைக் கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x