Published : 08 Nov 2018 08:50 AM
Last Updated : 08 Nov 2018 08:50 AM

கோவை, புதுக்கோட்டை, திருச்சியில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் 7 பேர் உயிரிழப்பு

டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப் பால் கோவை, புதுக்கோட்டை, திருச்சியில் 7 பேர் உயிரிழந்தனர்.

கோவை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த ராம கிருஷ்ணன் என்பவரது மகள் சுப (14), தொண்டாமுத்தூரைச் சேர்ந்த கதிர்வேல் (32) ஆகியோர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் தேவூரைச் சேர்ந்த ராஜ் குமார் (39), மேட்டுப்பாளையத்தை அடுத்த சாமநாயக்கன்பாளையத் தைச் சேர்ந்த பெரியண்ணன் (57) ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நேற்று இறந்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஒன்னதலை பகுதியை சேர்ந்த சந்திரசேகர், அணிக்கொரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். சில தினங்களுக்கு முன்பு கடும் காய்ச்ச லால் உதகை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பன்றிக்காய்ச்சல் உறுதிசெய்யப் பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக் காக கோவை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வானதிரை யான்பட்டி ஊராட்சி அத்திப் பள்ளத்தைச் சேர்ந்தவர் செ.புக ழேந்தி(34). வழக்கறிஞர். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவர், அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் ஒன் றிய செயலாளராக இருந்தார்.

கடந்த 10 நாட்களாக காய்ச்ச லால் அவதிப்பட்டு வந்த அவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச் சல் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட புகழேந்தி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தொகுதியில் அதிமுக பிரமுகர் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் இறந் தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி உமையாள்புரத்தைச் சேர்ந்த விவசாயியான நாகமுத்து(67), முசிறி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டபோது அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப் பட்டது. இந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x