Published : 21 Nov 2018 10:09 AM
Last Updated : 21 Nov 2018 10:09 AM
இந்திய கம்யூனிஸ்ட் அகில இந் தியப் பொதுச்செயலாளர் எஸ். சுதாகர் ரெட்டி நேற்று மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள ஸ்டாலினின் வீட்டில் நடந்த இந்தச் சந்திப்பின்போது திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி, ‘‘வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்துவது குறித்து ஸ்டாலினிடம் பேசினோம். கடந்த நான்கரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந் துள்ளது. தற்போதுள்ள சூழலில் மோடி அரசை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம். பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணியில் திமுக முக்கிய பங்கு வகிக்கும்'' என்றார்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த 13-ம் தேதி ஸ்டாலினை சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ள னர். தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் அவர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் இடதுசாரி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததால் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் தலா ஒரு தொகுதியை திமுக விடம் கேட்டிருப்பதாகக் கூறப் படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT