Published : 03 Nov 2018 08:58 AM
Last Updated : 03 Nov 2018 08:58 AM

‘இந்து தமிழ்’ நாளிதழுடன் இணைந்து இந்தியன் ஆயில் நிறுவனம் நடத்திய ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் ‘இந்து தமிழ்’ நாளிதழ் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யருக்கு நடத்திய ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் ‘இந்து தமிழ்’ நாளிதழ் இணைந்து, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரைப் போட்டியையும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியையும் நடத்தின. இதில் வெற்றிபெற்ற மாணவ - மாணவி களுக்கான பரிசளிப்பு விழா சென் னையில் நேற்று நடைபெற்றது. ஓவியப் போட்டியில் 33 பள்ளி களைச் சேர்ந்த 3,817 மாணவ, மாண விகளும், கட்டுரைப் போட்டியில் 27 பள்ளிகளைச் சேர்ந்த 2,540 பேரும், பேச்சுப் போட்டியில் 17 கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் பங்கேற்றனர்.

ஓவியப் போட்டியில் அரசுப் பள்ளிகளில் வேளச்சேரி, அரசு மேனிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி டி.முகியா முதல் பரிசும், தி.நகர் வித்யோதயா பெண்கள் மேனிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்.பாக்கியலஷ்மி 2-ம் பரிசும், அகனாம்பேட்டை அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.வனிதாவுக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது.

ஓவியப் போட்டியில் தனியார் பள்ளிகளில் அரக்கோணம் பாரதிதாசன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர் எம்.வர்ஷன் முதல் பரிசும், அண்ணாசாலையில் உள்ள கிரைஸ்ட் சர்ச் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கே.ஆசீப் அகமது 2-ம் பரிசும், மயிலாப்பூர் தி சில்ட்ரன்ஸ் கார்டன் மேனிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.பிரியா 3-ம் பரிசும் பெற்றனர்.

கட்டுரைப் போட்டியில் அரசுப் பள்ளிகளில் அசோக்நகர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி கே.பிரியங்காவுக்கு முதல் பரிசும், திருமால்பூர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஏ.பவித்ராவுக்கு 2-ம் பரிசும், அகனாம்பேட்டை அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி பி.அருள் பவித்ராவுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டன. கட்டுரைப் போட்டியில் தனியார் பள்ளிகளில் தி.நகர் வித்யோதயா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.தன்யாவுக்கு முதல் பரிசும், மேற்கு தாம்பரம்  ராமகிருஷ்ணா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஏ.கல்பனாவுக்கு 2-ம் பரிசும், திருவான்மியூர்  சங்கரா மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி எம்.அமிர்தவர்ஷினிக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

பேச்சுப் போட்டியில் முகப்பேர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் கல்லூரியில் பிசியோதெரபி பிரி வில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர் என்.அருணுக்கு முதல் பரிசும், செம்பரம்பாக்கம்  சாஸ்தா கல்வி யியல் கல்லூரியில் பி.எட். 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஆர்.ரேவ திக்கு 2-ம் பரிசும், கவுரிவாக்கம் பிரின்ஸ்  வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படிக்கும் மாண வர் ஏ.டி.டெக்ஸின் ரோமார்யோ வுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த விழாவில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (தமிழ்நாடு, புதுச்சேரி) செயல் இயக்குநர் ஆர்.சித்தார்த்தன், செயல் இயக்குநர் (தென்பிராந்தியம்) செந்தில்குமார் மற்றும் தலைமை பொதுமேலாளர் (விஜிலென்ஸ்) டி.ஜி.நாகராஜன், பொதுமேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) சபீதா நட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x