Published : 28 Nov 2018 04:50 PM
Last Updated : 28 Nov 2018 04:50 PM

மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம்: முதல்வர் பழனிசாமி

மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மத்திய அரசு நீங்கள் கேட்ட நிதியை வழங்குமா?

'கஜா' புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிவாரண பணிகளை மேற்கொள்வதில் மத்திய அரசு, மாநில அரசு இரண்டுக்கும் பொறுப்பு இருக்கிறது. மத்திய அரசு மனசாட்சிப்படி மனிதநேயப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம்.

மக்கள் மத்தியில் தமிழக அரசின் மீது எதிர்ப்பு நிலவுகிறதே?

'கஜா' புயலுக்கு தேவையான முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வளவு சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் முகாமிட்டு பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

முகாமில் உள்ள மக்கள் எப்போது வீடு திரும்புவார்கள்?

மின் இணைப்பு கொடுக்கும் பணி 4-5 நாட்களுக்கு நிறைவடையும். அதன்பிறகு மின் வசதி, குடிநீர் வசதி சீரடையும். வேட்டி, சேலை என 27 பொருட்கள் அடங்கிய பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. 4-5 நாட்களுக்குள் வீடு திரும்புவார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி எப்போது வழங்கப்படும்?

சேதங்கள் கணக்கிடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் பகுதி பகுதியாக அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x