Published : 21 Nov 2018 08:41 AM
Last Updated : 21 Nov 2018 08:41 AM

டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை என்ன? - சுகாதாரத் துறை அறிக்கை மீது உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர்பாக அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக சுகாதாரத் துறை தாக் கல் செய்த அறிக்கை மீது உயர் நீதிமன்றம் அதிருப்தியடைந்தது.

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில் அரசு மற்றும் தனி யார் மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்புக்காக போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைப்பதை உறுதி செய்ய வும், சிறப்பு வார்டுகளை அமைக்க வும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப் போது சுகாதாரத் துறை சார்பில் தாக் கல் செய்த பதில் மனுவில், ‘தமிழ கத்தில் நவ. 19 வரை டெங்குவுக்கு 13 பேரும், பன்றிக்காய்ச்சலுக்கு 27 பேரும் இறந்துள்ளனர். டெங்கு வால் 3,440 பேரும், பன்றிகாய்ச்ச லால் 1,745 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலைக் கட்டுப் படுத்தவும், தடுக்கவும் எடுக்கப்ப டும் நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார முதன்மைச் செயலர் நவ. 27-ல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தபோது சுகாதாரத் துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கை மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மதியத் துக்குள் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் வியாழக் கிழமை சுகாதார செயலர் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என நீதி பதிகள் எச்சரித்தனர். இதைய டுத்து சுகாதார உயர் அதிகாரி களிடம் இருந்து தகவல் பெறப்பட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. முழுமையாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு சார்பில் கால அவகாசமும் கோரப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x