Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ரூபிந்தர் சிங்குக்கு ரூ.30 லட்சம் பரிசு தொகையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. அதில் பல பிரிவுகளில் இந்தியர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
இப்போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் ரூபிந்தர் சிங்குக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அத்துடன் ஒரு பாராட்டு கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வெல்வோருக்கான பரிசுத்தொகையினை ரூ.30 லட்சமாக உயர்த்தி கடந்த 2011-ல் அறிவித்திருந்தேன். அந்தப் பரிசுத் தொகை தங்களுக்கு அளிக்கப்படும். இந்த வெற்றிக்கனியைப் பறித்ததற்காக தங்களுக்கும், தங்களது அணியினருக்கும் வாழ்த்துக்கள். இதுபோல் மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் தேசத்துக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கவேண்டும்.
இவ்வாறு அதில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT