Published : 08 Oct 2018 08:17 AM
Last Updated : 08 Oct 2018 08:17 AM
பல்கலைக்கழக துணைவேந்தர் கள் நியமனத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜய காந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பரபரப்பு தகவல் வெளியிட்டிருப்பது தமிழக மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், உயர் பதவியில் இருப்பவர்களே ஊழல் புகாருக்கு ஆளாகும் நிலையை கண்கூடாக பார்க்க முடிகிறது.
மேலும், தகுதி அடிப்படையி லேயே துணைவேந்தர்களை அப் போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமித்தார் என்றும் கூறியுள் ளனர். எந்த தகுதி அடிப்படையில் நியமனம் நடந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
துணைவேந்தர்கள் நியமிக்கப் படுவது கல்வித் தகுதி அடிப் படையிலா? சீனியாரிட்டி அடிப் படையிலா? அல்லது யார் அதிக பணம் கொடுக்கிறார்கள் என்ற அடிப்படையிலா என அனை வரையும் சிந்திக்கவைத்துள்ளது.
தமிழகமே லஞ்சம் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழல் ஒழிப்பு துறையினரும், மத்திய அரசும், தமிழக ஆளுநரும் இதில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என பெயரளவில் சொல்லாமல், இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை.
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில், ‘தமிழகத்தில் இடைத்தேர்தல் தேவை இல்லை’ என ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக, தலைமை செயலாளர் தற்போது தேர்தல் ஆணையத்தில் கூறியிருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல்.
பல்கலைக்கழக துணைவேந் தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதையும், இடைத்தேர் தல் வேண்டாம் என்று கூறியிருப் பதையும் வன்மையாக கண்டிக் கிறோம். மத்திய அரசும், நீதிமன்ற மும் உடனடியாக இதில் தலை யிட்டு ஆளுங்கட்சியின் அவலத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT