Published : 18 Oct 2018 10:03 AM
Last Updated : 18 Oct 2018 10:03 AM
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் விஷால் நடித்த சண்டக்கோழி-2 படம் இன்று திரையிடப்படாது என திருச்சி, தஞ்சை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித் துள்ளது.
புதிய திரைப்படங்களை திருட்டு விசிடி எடுக்க உதவியதாக குற்றம் சாட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 திரை அரங்குகளுக்கு புதிய படங்களை தரமாட்டோம் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அண்மை யில் தெரிவித்தது. இதற்கிடையே, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தின் தலைவரான விஷாலின் 'சண்டக்கோழி-2' திரைப்படம் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி, தஞ்சா வூர் மாவட்ட திரையரங்க உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம், காப்பாளர் ஜோசப் பிரான் சிஸ், செயலாளர் சிதம்பரம் ஆகி யோர் நேற்று திருச்சியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
திருட்டு விசிடி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 10 திரையரங் குகள் மீதான புகார்கள் நிலுவை யில் இருக்கும்போது, அவற்றுக்கு தண்டனை தரும் விதமாக புதிய படங்களைத் தருவதில்லை என விஷால் தலைமையில் இயங்கக் கூடிய தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
எந்த படமும் திரையிடப்படாது
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சி, தஞ்சை ஏரியாக் களில் அக்.18 (இன்று) முதல் சண்டக்கோழி - 2 உட்பட விஷால் நடித்த எந்த படத்தையும் திரை யிடுவது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரியாக் களில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவ தும் சண்டக்கோழி - 2 படத்தை திரையிடுவதில்லை என தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர் கள் சங்கமும் தீர்மானித்துள்ளது.
திருட்டு விசிடிக்களை கண்டு பிடிப்பதற்கு, அவர்கள் எங்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டுமே தவிர, எங்களையே திருடர்களாக சித்தரிப்பது தவறான செயல். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். அதேநேரத்தில் தற்போது ஓடிக்கொண்டுள்ள விஷாலின் எந்த படத்தையும் நிறுத்த மாட்டோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT