Published : 12 Oct 2018 12:12 PM
Last Updated : 12 Oct 2018 12:12 PM

எளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கிய சாதனையாளர் சங்கர்: தமிழிசை இரங்கல்

எளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கிய சாதனையாளர் சங்கருக்கு தனது இரங்கலைத் தெரிவிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சங்கர் ஐஏஎஸ் அகடாமியின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான சங்கர் நேற்று (வியாழக்கிழமை) இரவு சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள தமிழிசை, ’’இந்திய அரசு குடிமைப் பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.தென்னாட்டு ஏழை எளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப்பயணம் நம்மை வருத்துகிறது. அவரது குடும்பத்திற்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x