Last Updated : 09 Oct, 2018 08:48 AM

 

Published : 09 Oct 2018 08:48 AM
Last Updated : 09 Oct 2018 08:48 AM

டிசம்பரில் சாய்னா- காஷ்யப் திருமணம்

இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங் கள் சாய்னா நெவால், பாருபள்ளி காஷ்யப் ஆகியோரின் திருமணம் டிசம்பரில் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி பாட் மிண்டன் வீராங்கனையாக உலா வருபவர் சாய்னா நெவால். 2012-ம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலத்தை வென்று சாதனை படைத்தவர் நெவால். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியி லும் பதக்கம் வென்றிருந்தார் சாய்னா.

அதைப் போலவே ஆண்கள் பிரிவில் முன்னிலை வீரராக இருப்பவர் பாருபள்ளி காஷ்யப். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.

10 வருடங்களாக பழகி வந்த இவர்கள் வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு வீட்டினரின் சம்மதத்துடன் நடைபெறும் இந்த திருமணத்துக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என சுமார் 100 பேரை மட்டுமே அழைக்க முடிவு செய் துள்ளனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 21-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து சாய்னா நெவால் கூறியதாவது: போட்டி மிகுந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த உலகில் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருப்பது கடினம்தான். இருந்த போதும் நாங்கள் இருவரும் காத லித்து தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளோம்.

திருமண ஏற்பாடுகள் மும்முர மாக நடைபெற்று வருகின்றன. திருமணத்துக்குப் பின்னர் தொடர்ந்து பாட்மிண்டன் போட்டி களில் விளையாடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

2010-ல் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ் தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இதைத் தொடர்ந்து இந்திய கிரிக் கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கலை திருமணம் செய்து கொண்டார்.

2016-ல் இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, கூடைப்பந்து வீராங்கனை பிரதிமா சிங்கைத் திருமணம் செய்தார். அந்த வரிசையில் சாய்னா, பாருபள்ளி காஷ்யப் ஆகிய விளையாட்டு நட்சத்திரங்களின் திருமணமும் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x