Published : 13 Oct 2018 09:16 AM
Last Updated : 13 Oct 2018 09:16 AM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் எம்எல்ஏ நேற்று சந்தித்துப் பேசினார்.
சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத் தில் முதல்வர் பழனிசாமியையும் காவல் துறை அதிகாரியையும் கடுமையாக விமர்சித்ததாக கூறி, கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்த னர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை கோபாலபுரம் இல்லத்தில் கருணாஸ் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ''நான் கைது செய்யப்பட்டபோது எனக்காக குரல் கொடுத்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை'' என்றார்.
பின்னர் சத்தியமூர்த்தி பவன் சென்ற அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து அடையாறில் உள்ள இல்லத்தில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் சந்தித்துப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT