Published : 29 Aug 2018 01:59 PM
Last Updated : 29 Aug 2018 01:59 PM
சிறையிலிருந்து பரோலில் வெளிவர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் எளிதாக வர முடிகிறது என்ற செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து மாநில மனித உரிமை ஆணையம் சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிறைச்சாலைகள் கைதிகள் பரோலில் வெளிவர ரூ.5000 லஞ்சம் கொடுத்தால் போடும் என செய்தி வெளியானது. இதையடுத்து இந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக தமிழக சிறைத்துறை கூடுதல் டிஜிபி விரிவான அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய ஆணைய உறுப்பினரான நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.
மாநில மனித உரிமை ஆணைய உத்தரவில் கீழ்கண்ட கேள்விகளும் வைக்கப்பட்டுள்ளன.
(1) நன்னடத்தையின் அடிப்படையில் கைதிகளுக்கு எத்தனை நாட்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது? 2017 - 18 ஆம் ஆண்டில் எத்தனை கைதிகள் பரோல் கேட்டுள்ளனர்?
(2) பரோல் கொடுக்கவில்லை என எத்தனை புகார்கள் வந்துள்ளன? அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
(3) கைதிகளின் உரிமைகளை மீறும் வகையிலான சிறைத்துறையினரின் அஜாக்கிரதையான செயல்பாடு மனித உரிமை மீறல் ஆகாதா?
மேற்கண்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT