Last Updated : 07 Aug, 2018 11:44 AM

 

Published : 07 Aug 2018 11:44 AM
Last Updated : 07 Aug 2018 11:44 AM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைகிறது

 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரத்து 633 கனஅடியிலிருந்து 10 ஆயிரத்து 429 கனஅடியாக குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக கனமழை பெய்தது. இதனால் அதிக நீர்வரத்து காரணமாக ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் வேகமாக நிரம்பின. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்ப‌ட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால், அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்த‌து. திங்கள்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரத்து 487 கனஅடியில் இருந்து 11 ஆயிரத்து 633 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர்இருப்பு 91.97 டிஎம்சியாகவும் இருந்தது.

இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 429 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 118.61 அடியாகவும், நீர் இருப்பு 91.27 டிஎம்சியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 18 ஆயிரத்து 300 கனஅடியாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x