Published : 10 Aug 2014 09:42 AM
Last Updated : 10 Aug 2014 09:42 AM

48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தென் மேற்கு பருவ மழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. தற்போது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

கடலூர் மாவட்டம் தொழுதூரில் 6 செ.மீ., திண்டிவனம், கோவை அருகே சின்னக்களார், செய்யூர் உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ., கன்னியாகுமரி, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், வேலூர், சேலம் மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

வெப்பச்சலனம் காரண மாகவே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அல்லாத மாவட்டங்களில் மழை பெய்துள் ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x