Published : 23 Aug 2018 09:09 AM
Last Updated : 23 Aug 2018 09:09 AM

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை தொடங்குகிறது - செப். 12-ம் தேதி வரை நடைபெறும்

 

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், நாளை தொடங்குகிறது.

இதுகுறித்து, திருவள்ளூர் செய்தி- மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறன்கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஏற்கெனவே கடந்த 16,17 ஆகிய தேதிகளில் தொடங்குவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட முகாம், நாளை துவங்கப்பட உள்ளது. ஊராட்சி ஒன்றியம் வாரியாக வரும் செப்டம் பர் 12-ம் தேதி வரை நடக்க உள்ள இம்முகாம், நாள் தோறும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ளது.

இந்த மருத்துவ மதிப்பீட்டு முகாமில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் பங்கேற்கலாம்.

தேசிய அடையாள அட்டை

மேலும், இம்முகாமில் தேசிய அடையாள அட்டை இல்லாதவருக்கு அடையாள அட்டை யும், உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு அதற்கான ஏற்பாடும் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x