Published : 15 Jul 2018 01:30 AM
Last Updated : 15 Jul 2018 01:30 AM
திண்டுக்கல் செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று வந்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் விரோத, ஊழல் ஆட்சி நடைபெறுவது பாமரனுக்கே தெரியும். டெல்லியிலிருந்து வந்து அமித்ஷா சொன்னால் தான் ஏற்றுக் கொள்வீர்களா. ஊழல் ஆட்சி தான் நடக்கிறது. முறைகேடுகள் நிறைந்த ஆட்சி. இந்தியாவிலேயே ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதனால் தான் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டுமென மக்கள் விரும்புகின் றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் வந்துவிடும். இந்த ஆட்சியின் அனைத்து ஊழல்களும் தானாகவே வெளியே வந்துவிடும்.
யாரால் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கைகோர்த்தார்களோ அவர்களே இந்த ஆட்சியின் அவலத்தை வெளியே கொண்டு, முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். இந்த இருவரையும் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தும் காலம் வெகு விரைவில் வர உள்ளது. என் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, மக்கள் ஆதரவுடன் நாங்கள் ஆட்சியமைப்போம்.
அதற்கான காலம் விரைவில் கனியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT