அதிமுக பொதுக் குழுவை எதிர்த்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி அறிவிப்பு

அதிமுக பொதுக் குழுவை எதிர்த்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகளைத் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக மீண்டும் இன்று (நவ.7) விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார். மேலும், இந்த உரிமையியல் வழக்குகள் மீதான விசாரணையை வேறு நீதிபதி முன்பாக பட்டியலிடும்படி தலைமை நீதிபதிக்கு அவர் பரிந்துரைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in