Published : 22 Jun 2018 07:42 AM
Last Updated : 22 Jun 2018 07:42 AM
பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மக்களை போலீஸை கொண்டு மிரட்டக்கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ தெரிவித்தார்.
விருதுநகரில் அவர் கூறியது:
பசுமை வழிச் சாலை திட்டத்தில் சேலம், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இத்திட்டத்தை எதிர்த்து ஜனநாயக முறைப்படி போராடும் விவசாயிகளின் கோரிக்கையை அரசு காது கொடுத்து கேட்க வேண்டும்.
காவல் துறையை வைத்து மக்களை மிரட்டுவது ஏற்புடையதல்ல என்றார்.
பின்னர் அவர் சாத்தூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ஒற்றுமையுடன் உள்ளனர். 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தால் அதே வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT