Published : 24 Jun 2018 01:36 PM
Last Updated : 24 Jun 2018 01:36 PM

சென்னையில் சைக்கிளிங் சென்ற நடிகையிடம் செல்போன் பறிப்பு

 

சென்னையில் நேற்று காலையில் சைக்கிளிங் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நடிகையிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நடிகை சஞ்சனா சிங். இவர் 'கோ', 'அஞ்சான்', 'தனி ஒருவன்', 'ரேணிகுண்டா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 6.30 மணிக்கு சைக்கிளிங் உடற்பயிற்சிக்காகச் சென்றார், அப்போது அண்ணாநகர் சிந்தாமணி சிக்னல் அருகே வந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் சஞ்சனா சிங் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். அவர்கள் சைக்கிளில் சஞ்சனா சிங் விரட்டிய போதிலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.

இது குறித்து நடிகை சஞ்சனா சிங் அண்ணா நகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவைப் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை சஞ்சா சிங் இது குறித்து கூறுகையில், ''நான் நேற்று காலை வழக்கம் போல் சைக்கிளிங் உடற்பயிற்சிக்காச் சென்றேன். அப்போது செல்போனில் கூகுள் மேப் மூலம் இடத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த இரு நபர்கள் எனது செல்போனைp பறித்து, தப்பிச் சென்றனர். நான் அவர்களைச் சைக்கிளில் நீண்ட தொலைவு பின்தொடர்ந்தும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. என்னுடைய உதவியாளரும் பின்தொடர்ந்தார், ஆனால் அந்த நபர்கள் இருவரும் எங்கோ மறைந்துவிட்டனர்'' என்று தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x