Published : 29 Aug 2014 02:25 PM
Last Updated : 29 Aug 2014 02:25 PM
உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகள் மற்றும் அரக்கோணம், விருத்தாசலம், கடலூர், சங்கரன்கோவில் நகராட்சிகள் உள்பட ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி அன்று நடைபெறுகிறது.
கோவை மேயர் பதவிக்கு கணபதி ராஜ்குமார், தூத்துக்குடி மேயர் பதவிக்கு அந்தோணி கிரேஸி, திருநெல்வேலி மேயர் பதவிக்கு புவனேஸ்வரி போட்டியிடுவர் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது. அரக்கோணம் உள்பட 8 நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரக்கோணம் - கண்ணதாசன், கடலூர் - ஆர். குமரன், விருத்தாசலம் - அருள் அழகன், குன்னூர் - சரவணகுமார், புதுக்கோட்டை - ராஜசேகரன், கொடைக்கானல் - ஸ்ரீதர், ராமநாதபுரம் - சந்தான லெட்சுமி, சங்கரன் கோவில் நகராட்சி - ராஜலெட்சுமி ஆகியோர் போட்டியிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 22-ம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT