Published : 14 Jun 2018 10:15 AM
Last Updated : 14 Jun 2018 10:15 AM

காஞ்சியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு: வியாபாரிகள் தொடர்ந்து போராட்டம்

காஞ்சிபுரத்தில் உள்ள ரயில்வே சாலையில் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தில் மிக முக்கிய மான இடங்களில் ஒன்று ரயில்வே சாலை. இங்கு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டது. அக்கடையில் சிலர் மது அருந்திவிட்டு, அவ்வழியாகச் செல்பவர்களிடமும், வியாபாரிகளிடமும் தகராறு செய்து வந்தனர். சிலர் மது அருந்திவிட்டு வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கா மல் தகராறு செய்வது, குறை வான தொகை கொடுப்பது போன்ற சம்பவங்களும் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து அந்த மதுக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். எனவே இப்பிரச்சினையில் தலையிட்டு மாவட்ட ஆட்சியர் அக்கடையை மூட உத்தரவிட்டார்.

இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அந்தப் பகுதி யில் புதிதாக கடை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளதாக வியாபாரிகள் குற் றம்சாட்டினர்.

இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.

இப்போராட்டம் குறித்து தகவலறிந்த விஷ்ணு காஞ்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அதிகாரிகளிடம் பேசி இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x