Published : 13 May 2018 04:33 PM
Last Updated : 13 May 2018 04:33 PM

சாத்தூர் அருகே சாலை விபத்து: 6 பேர் பலி; கோயிலுக்குச் சென்று திரும்பியபோது பரிதாபம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.

இது குறித்து போலீஸ் தரப்பில், "விருதுநகர் மாவட்டம் மாதாங்கோவில்பட்டியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வாடகை வேன் ஒன்றில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

கோயில் வழிப்பாட்டை முடித்து திரும்பும்போது ராமச்சதிராபுரம் அருகே வேனின் சர்க்கரங்களில் ஒன்று கழன்றதாகத் தெரிகிறது.

இதில் ஓட்டுநர் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய வேன் பள்ளத்தில் தலைகீழாகப் பாய்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x