Published : 12 May 2018 09:54 AM
Last Updated : 12 May 2018 09:54 AM

பராமரிப்பு பணிகள் காரணமாக பராமரிப்பு காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம்

திருநின்றவூர் மற்றும் ஆரம்பாக்கம் பகுதியில் ரயில்பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இன்று முதல் 16-ம் தேதி வரை சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12.15 மின்சார ரயில் விரைவு பாதையில் இயக்குவதால், கொரட்டூர், பட்டரைவாக்கம் திருமுல்லைவாயல் மற்றும் அன்னனூர் ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும். சென்ட்ரல் - அரக்கோணம் அதிகாலை 1.20 மணி மின்சார ரயிலும் கொரட்டூர், பட்டரைவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர், ஆவடி, இந்து கல்லூரி, பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

12, 13, 14-ம் தேதிகளில் சென்ட்ரல் - சூலூர்பேட்டை காலை 7.30, 8.15 மணி மின்சார ரயில்கள் எலாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். சூலூர்பேட்டை - சென்ட்ரல் இடையே காலை 10, 11.15 மணி மின்சார ரயில்கள் எலாவூரில் இருந்து சென்ட்ரலுக்கு இயக்கப்படும். சென்ட்ரல் - ஆவடி மதியம் 2.05 மணி ரயில், ஆவடி - சென்ட்ரல் மதியம் 2.50 மணி ரயில்கள் 12 (இன்று), 13-ம் தேதிகளிலும், 19, 20ம் தேதிகளிலும் ரத்தாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x