Published : 16 May 2018 09:07 AM
Last Updated : 16 May 2018 09:07 AM

கர்நாடக தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கட்சிக்கே மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்- தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கருத்து

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே மக்கள் அதிகம் வாக்களித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மறைமலைநகரில் காஞ்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

தற்போது கர்நாடகத்தில் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கர்நாடகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையோ பெரும் ஏமாற்றத்தையோ ஏற்படுத்துவதாக இல்லை. காங்கிரஸ் கர்நாடகத்தில் தோற்றது ஏமாற்றத்தை அளித்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரையில் கர்நாடக மாநிலத்தில், கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கட்சிகள் மாறி ஆட்சி அமைவது வழக்கம்தான். மொத்தம் பதிவான வாக்குகளில் பாஜகவைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சி 39 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறது.

தற்போது நடைபெற்ற தேர்தல் சித்தராமையாவுக்கும், எடியூரப்பாவுக்கும் இடையே நடைபெற்ற தேர்தல். பிரதமர் மோடிக்கும், எங்கள் தலைவர் ராகுல்காந்திக் கும் இனிமேல் தேர்தல் வரும் அதில் நிச்சயமாக காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும். வெள்ளையர்களால் அழிக்க முடியாத காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x