Published : 24 May 2018 03:39 PM
Last Updated : 24 May 2018 03:39 PM

சொந்த மக்களையே சுட்டுக் கொன்ற உங்கள் பாவத்தை வரலாறு மன்னிக்காது: விவேக் ஜெயராமன் கண்டனம்

 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள விவேக் ஜெயராமன் ‘சொந்த மக்களை சுட்டுக்கொன்ற பாவத்தை வரலாறு மன்னிக்காது’ என்று தமிழக அரசைக் கண்டித்துப் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி பேரணி நடத்திய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை தமிழகம் தாண்டி இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த மாவட்டத்துக்கு இதுவரை முதல்வர் உள்ளிட்ட ஆளுங்கட்சியின் ஒரு எம்.எல்.ஏ கூட செல்லாதது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

முதல்வர் பதவி விலகும் வரை போராட்டம் என திமுக அறிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் இந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தனது ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.

அவரது பதிவில் “நீங்கள் செய்த துரோகத்தைக் கூட மன்னிக்கலாம். ஆனால், சொந்த மக்களையே சுட்டுக் கொன்ற உங்களின் பாவத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது” என்று கண்டித்துள்ளார்.

அவரது பதிவை ஒருவர் கூட விமர்சிக்கவில்லை. மாறாக, அனைவரும் அதை வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x