Published : 25 May 2018 06:19 PM
Last Updated : 25 May 2018 06:19 PM
ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் முதல்வர் தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவே ஆளுநரை சந்தித்ததாக மு.க.ஸ்டாலின், டிஜிபி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு அச்சிறுப்பாக்கம் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“கடையடைப்பு போராட்டம் நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. கடையடைப்பு வெற்றிப்பெற காரணமான வணிகர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி. நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படும் என்று அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்.
மேலும் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான முதலமைச்சர், டிஜிபி பதவி விலக வேண்டும். தங்கள் பதவியை காப்பாற்றவே முதலமைச்சர் ஆளுநரை சந்தித்தார். அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடலாம்.
ஸ்டெர்லைட் விவாகரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT