Published : 12 May 2018 12:14 PM
Last Updated : 12 May 2018 12:14 PM

பெண்ணை கொலை செய்து தானும் தற்கொலை செய்த இளைஞர்: திண்டுக்கல்லில் கோர சம்பவம்

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் பெண்ணை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த 10-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் நிலைக்கோட்டை அருகே உள்ள கொங்கர் குளம் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (27) என்பவர், அதே பகுதியை சேர்ந்த பாலாமணி (35) என்ற பெண்ணுடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.

அறைக்கு சென்ற பின் கதவுகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை வரை அந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து காவல்துறைக்கு விடுதி காப்பாளர்கள் தகவல் அளித்தனர். இதன்பின் அங்கு வந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது படுக்கை அறையில் பிரசாந்த் வாயில் நுரையுடன் இறந்து கிடந்தார். அறையின் பாத்ரூமில் பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைத்து போலீஸார் சோதனை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பிரசாந்த் பாலாமணியை கொலை செய்துவிட்டு தான் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x