Published : 29 May 2018 06:03 AM
Last Updated : 29 May 2018 06:03 AM

கத்திரி வெயில் நிறைவடைந்தது

தமிழகத்தில் கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) கடந்த 4-ம் தேதி தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளில் கத்திரி வெயிலின்போது கடும் வெப்பம் நிலவியது. ஆனால், இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் பெரிய அளவில் இல்லாத நிலையில், 24 நாட்களாக நீடித்த கத்திரி வெயில் நேற்றுடன் நிறைவடைந்தது.

மே 1 முதல் 28-ம் தேதி வரையிலான காலகட்டத் தில் அதிகபட்சமாக மே 1-ம் தேதி திருத்தணியில் 108.68 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருத்தணி, திருச்சி, கரூர் பரமத்தி, வேலூர், மதுரை, சேலம், தருமபுரி ஆகிய 7 நகரங்களில் 104 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. திருத்தணியில் 16 நாட்கள் 104 டிகிரிக்கு மேல் பதிவானது. திருச்சி, வேலூரில் 5 நாட்கள், கரூர் பரமத்தியில் 3 நாட்கள், மதுரையில் 2 நாட்கள், சேலம், தருமபுரியில் 1 நாள் என 104 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த ஆண்டு கத் திரி வெயிலின்போது ஒருநாள்கூட வெப்பம் 100 டிகிரி யைத் தொடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x