Published : 03 May 2018 07:47 AM
Last Updated : 03 May 2018 07:47 AM
நிர்மலாதேவி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் முருகனின் ஜாமீன் மனுவை சாத்தூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
கல்லூரி மாணவிகளை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டிய புகாரில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி மதுரை காமராசர் பல்கலைக்கழக எம்பிஏ துறை உதவிப் பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அப்போது, உதவிப் பேராசிரியர் முருகனுக்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் கோபிநாத் விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை, சாத்தூரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது ஜாமீன் கோரிய மனுவை நீதித்துறை நடுவர் கீதா தள்ளுபடி செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT