Published : 09 May 2018 09:43 AM
Last Updated : 09 May 2018 09:43 AM

வெளிமாவட்ட ரவுடிகள் பதுங்கலா?: சென்னையில் ரவுடிகளை கண்காணிக்கும் பணி தீவிரம்

சென்னையில் ரவுடிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத் தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பதுங்கியிருந்த அவரை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீ ஸார் துப்பாக்கி முனை யில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.சென்னை உளவு பிரிவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் இருக்கும்போது ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீ ஸார் ராக்கெட் ராஜாவை கைது செய்தது நுண்ணறிவு மற்றும் உளவுப் பிரிவு போலீஸாருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

எனவே, மீண்டும் ஒருமுறை கோட்டை விட்டு விடக்கூடாது என்பதில் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் உறுதியாக உள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை யில் உள்ள ரவுடிகளை மீண்டும் கண்காணிக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

100-க்கு தகவல் தெரிவிக்கலாம்

குறிப்பாக வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குற்றவாளிகள் சென்னையில் பதுங்கி உள்ளார்களா, அவர்களுக்கு யாரேனும் அடைக்கலம் கொடுக்கிறார்களா என்று தீவிரமாக கண்காணிக்கவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு நுண்ணறிவு பிரிவு போலீஸார் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரவுடிகள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் பொது மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறை போன் எண் 100-க்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை யில் உள்ள திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, அண்ணா நகர், அடையார் உட்பட 12 காவல் மாவட்ட போலீஸாரும் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x