Published : 10 May 2018 07:59 AM
Last Updated : 10 May 2018 07:59 AM
டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை கைவிடுவதற்கு, அவரது தந்தை ரவி, நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவித்தார்.
திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணியாற்றிய விஷ்ணுபிரியா(31) 2015 ஆக.18-ல் முகாம் அலுவலகத்தில் தூக்கில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடியே அவரது இறப்புக்குக் காரணம் புகார் எழுந்தது.
அவரது மரணம் குறித்து 2 ஆண்டுகளாக விசாரித்து வந்த சிபிஐ, இந்த வழக்கை கைவிடப்பட்ட வழக்கு என முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், விஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. கோவை நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான ரவி, சிபிஐ வழக்கை கைவிடுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். வழக்கு மே 24-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT