Published : 19 May 2018 09:15 AM
Last Updated : 19 May 2018 09:15 AM
சின்னமலை - டிஎம்எஸ் இடையி லான மெட்ரோ ரயில் சுரங்க பாதை யில் டிராலியில் சென்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். 80 கி.மீ வேகத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி இன்று சோதனை நடத்தப்பட உள்ளது.
சென்னை அண்ணா சாலையில் சின்னமலை - டிஎம்எஸ் இடையி லான சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2 மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு) ஏ.கே.மனோகரன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு மற்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ரயில் பாதையின் தரம், சிக்னல் செயல்பாடு, ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT