Published : 16 May 2018 08:05 AM
Last Updated : 16 May 2018 08:05 AM
புதுச்சேரியில் வங்கி கணக்குகளில் இருந்து ஏடிஎம் கார்டுகள் மூலம் பல கோடி பணம் மாயமான விவகாரத்தில் அதிமுக பிரமுகர் சந்துருஜி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
புதுவையில் பலரது வங்கி கணக்கில் இருந்து சமீப காலமாக பல கோடி பணம் மாயமானது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அதிமுக பிரமுகர் சந்துருஜி, என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோரை தேடி வருகின்றனர்.
சந்துருஜி, புதுச்சேரி அதிமுக நகர கமிட்டி உறுப்பினராக உள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிட முயற்சித்தார். அவரை பிடித்தால் பல அரசியல் பிரமுகர்கள் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்துருஜியை தேடப்படும் குற்றவாளியாக போலீஸ் அறிவித்துள்ளது. அவரது புகைப்படத்துடன், அவரது விவரம் அடங்கிய நோட்டீஸ் புதுச்சேரி, தமிழக காவல்நிலையங்களில் ஓட்டப்பட்டுள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால் புதுவை சிபிசிஐடி போலீஸுக்கு தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு இவ்வழக்கில் தொடர்புள்ளதால் போலீஸாருக்கு கடும் நெருக்கடி உள்ளது. அதனால் சிலரை மட்டும் கைது செய்து இவ்வழக்கை முடிக்க அழுத்தம் தரப்படுகிறது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT