Published : 01 May 2018 10:18 AM
Last Updated : 01 May 2018 10:18 AM
காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் உள்ள மரம் அறுக்கும் தொழில் நிறுவனம் ஒன்றில் செம்மரம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே வனத்துறை அதிகாரிகள் அந்த மரம் அறுக்கும் தொழில் நிறுவனத்தில்சோதனை நடத்தினர். அப்போது அங்கு 80 கிலோ செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்த செம்மரக் கட்டைகளை அங்கு வைத்தது யார் என்பது தொடர்பாக அந்த இடத்தின் உரிமையாளர், அதனை வாடகைக்கு எடுத்து மரம் அறுக்கும் தொழில் நிறுவனத்தை நடத்துபவர்கள், அங்குப் பணி செய்பவர்கள் எனப் பலரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT