Published : 12 Apr 2018 11:08 AM
Last Updated : 12 Apr 2018 11:08 AM
பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், அண்ணா அறிவாலயம் ஆகியவற்றின் முன்பு கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அனைவரும் கருப்பு உடை அல்லது கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் எனவும், அனைவரது வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும், திமுக தலைமைக் கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, திமுக தலைவர் கருணாநிதியில் கோபாலபுரம் இல்லம், திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயம் ஆகியவற்றின் முன்பு கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT