Last Updated : 27 May, 2024 09:56 PM

4  

Published : 27 May 2024 09:56 PM
Last Updated : 27 May 2024 09:56 PM

பிரதமர் மோடி குமரி - விவேகானந்தர் பாறையில் மே 30 முதல் 3 நாள் தியானம்

பிரதமர் மோடி | கோப்புப்படம்

நாகர்கோவில்: பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இம்மாதம் 30-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை தியானம் செய்கிறார். இதற்காக கன்னியாகுமரியில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி வருகிற 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். டெல்லியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு அன்று மாலை வருகிறார்.

விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி அன்று மாலையில் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபத்தில் தியானம் செய்கிறார். பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு திங்கள்கிழமை இரவில் இருந்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x