Published : 26 Aug 2014 12:00 AM
Last Updated : 26 Aug 2014 12:00 AM
குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் அடுத்த நடூவீரப்பட்டு பகுதியில் 8 வயது சிறுமி தனது தாயாருடன்அதே பகுதியில் உள்ள கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போதுதயார் கவனிக்காத போதுசிறுமியை அங்கு வந்த இருவர்வாயை மூடி, அருகில் உள்ள மறைவான இடத்துக்கு தூக்கிச்செல்ல முயன்றாக கூறப்படுகிறது.
அப்போது, அவர்களின் பிடியில் இருந்து திமிறிய சிறுமி கத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் மற்றும் சிறுமியின் தாயார், அவர்களைப் பிடித்து சோமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இளைஞர்கள் இருவரையும் மீட்டு விசாரித்ததில் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த சேகர் பிரகரன்(25), புருஷோத்பிரகரன்(35) என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT