Published : 02 Apr 2018 09:24 AM
Last Updated : 02 Apr 2018 09:24 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
குமரிக்கடல் முதல் தெலங்கானா வரை பரவி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. தற்போது குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தி வேலூர், பாலக்கோடு, கோத்தகிரி, குன்னூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT