Published : 21 Apr 2018 10:33 AM
Last Updated : 21 Apr 2018 10:33 AM

ஜெயலலிதா மரணம்: ஏப். 30-ல் டிஜிபி ஆஜராக உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிஜிபி திரிபாதி, ஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி உட்பட 7 பேரிடம் வரும் 30-ம் தேதி சசிகலாவின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்துகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், சசிகலாவின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், மருத்துவர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் டிஜிபி ராமானுஜம், சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் டிஜிபி திரிபாதி, சிபிசிஐடி ஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி, ஐஜி தாமரைக்கண்ணன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர்கள் கண்ணன், ஐயப்பன் ஆகிய 7 பேர் வருகிற 30-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினம் இவர்கள் 7 பேரிடமும் சசிகலாவின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x