Published : 04 Apr 2018 09:26 PM
Last Updated : 04 Apr 2018 09:26 PM

ஆளுநருடனான சந்திப்பில் நடந்தது என்ன?- முதல்வர் பழனிசாமி விளக்கம்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் சந்தித்து தமிழக சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து விளக்கம் அளித்தார்.

டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய ஆளுநரை இன்று மாலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர்.

ஸ்டெர்லைட் விவகாரம், காவிரி மேலாண்மை வாரிய விவகாரம், நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட தமிழக போராட்ட சூழ்நிலையை கருத்தில்கொண்டு மத்திய அரசின் மூலம் மாநில அரசுக்கு வழிகாட்டுதல் எதுவும் தரப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ஆளுநர் - முதல்வர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்நிலையில் ஆளுநருடனான 30 நிமிட சந்திப்பு குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காவிரி நீர் பிரச்சினை சம்பந்தமாகவும், மேலும் பல்வேறு போராட்டங்கள் குறித்தும் ஆளுநர் எங்களிடம் கேட்டார். அதற்கு உரிய பதிலை அவர் திருப்தியடையும் அளவுக்கு அளித்துள்ளோம்.

தமிழகத்தில் கோடையில் தண்ணீர் பிரச்சினை குறித்து கேட்டார். அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தோம். நாங்கள் கூறிய கருத்துகளை ஆளுநர் உன்னிப்பாக கவனித்து திருப்தியாக இருப்பதாக தெரிவித்தார்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x