Published : 05 Apr 2018 10:19 AM
Last Updated : 05 Apr 2018 10:19 AM

பெட்ரோல் பங்குகள் இன்று திறந்திருக்கும்: தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில், தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் பங்குகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களும் பல்வேறு தேதிகளில் உண்ணாவிரதம், மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் நலன் காத்திட வேறுபாடுகளை மறந்து அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து அறிவிக்கும் போராட்டங்களில் மட்டுமே தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பங்கேற்கும். கூட்டாக ஒரு குறிப்பிட்ட நாளில் கடையடைப்பு, போராட்டம் அறிவிக்காத காரணத்தால், 5-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பங்கேற்காது. எனவே 5-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்குகளும் வழக்கம்போல் செயல்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x