Published : 25 Apr 2024 05:45 AM
Last Updated : 25 Apr 2024 05:45 AM

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் லட்சுமி நாராயணன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் டி.லட்சுமி நாராயணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது விருப்பப்படி, அவரது உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு தானமாக வழங்கப்பட்டது.

கடந்த 1967-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி டி.லட்சுமி நாராயணன் (91). கடந்த 1972-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். தென்ஆற்காடு மாவட்ட ஆட்சியர், முதல்வரின் செயலர் பதவிகளை வகித்த இவர், கடந்த 1976-77-ல் ஆளுநரின் ஆலோசகராகவும், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றி னார்.

பின்னர் கடந்த 1987-ம் ஆண்டுஜூலை மாதம் 1-ம் தேதி ஓய்வுபெற்ற நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 1987 முதல் 1993 வரைஅப்பதவியில் இருந்தார். சென்னை, முகப்பேர் கிழக்கு காமதேனு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

உடல் தானம்: இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை 6.40 மணிக்கு காலமானார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று காலை வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இவர் தனது உடலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானமாக வழங்க அறிவுறுத்தியிருந்த நிலையில், நேற்று மதியம் 2 மணிக்கு உடல் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.லட்சுமிநாராயணன் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். கடந்த1987-93 காலத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும் இருந்து திறம்படப் பணியாற்றியவர்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், முன்னாள்,இன்னாள் அதிகாரிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும்ஆறுதலை தெரிவித்துக் கொள் கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x