Last Updated : 24 Apr, 2024 09:53 PM

 

Published : 24 Apr 2024 09:53 PM
Last Updated : 24 Apr 2024 09:53 PM

மேட்டூர் அணை நீர்மட்டம் 55 அடிக்கு கீழ் சரிவு - முழுமையாக தெரிந்தது நந்தி சிலை!

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை, ஜலகண்டேசுவரர் கோயில் கோபுரம், கிறிஸ்துவ தேவாலய கோபுரமும் முழுவதும் வெளியே தெரிகிறது.

மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 மைல் பரப்பளவை கொண்டுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, காவிரி கரையில் இருந்த மக்கள், மேடான பகுதிக்கு குடியமர்த்தப்பட்டனர். அப்போது, விளை நிலங்கள், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயில், பழமை வாய்ந்த கிறிஸ்துவ ஆலயம் மக்கள் இடிக்காமல் அப்படியே விட்டு சென்றனர்.

அணையின் நீர்மட்டம் குறையும் போது, காவிரி கரையோர பகுதியில் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அப்போது, நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் வெளியே தெரியும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது, பண்ண வாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருக்கும் நந்தி சிலையின் தலைப்பகுதி, கிறில்துவ ஆலயத்தின் முகப்பு பகுதி வெளியே தெரிவது வழக்கம்.

மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக விநாடிக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிக்கிறது. காவிரி கரையோர மக்களின் குடிநீர் தேவைக்காக, அணையில் இருந்து விநாடிக்கு 1,200 கன அடி நீர் தற்போது திறக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 54.49 அடியாகவும், நீர் இருப்பு 20.75 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்துவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது. மேலும் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கோபுரத்தின் மேல் பகுதி நீருக்கு வெளியே தெரிய தொடங்கியது.

அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி அணையின் நீர்மட்டம் 59 அடிக்கு கீழ் சரிந்த நிலையில், நந்தி சிலை முழுமையாக தெரிந்தது. பின்னர், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக, மீண்டும் நந்தி சிலை மூழ்கியது.

தற்போது, அணையின் நீர்மட்டம் 55 அடிக்கு கீழ் சரிந்துள்ளதால், மீண்டும் நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிகிறது. இதனை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பரிசல் மூலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். அதேபோல், நந்தி சிலையைக் காண வார விடுமுறையில் பண்ணவாடிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றர். தூரத்தில் இருந்தே நந்தி சிலையை பார்த்து ரசித்தனர். பின்னர் பண்ணவாடி பரிசலில் மீன் வாங்கி சாப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x