Published : 21 Apr 2018 10:25 AM
Last Updated : 21 Apr 2018 10:25 AM

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புற்றுநோயை எளிதாக கண்டுபிடிக்க ரூ.1.50 கோடியில் நவீன கருவி

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை இரைப்பை, குடல், கல்லீரல் மருத்துவத்துறையில் ரூ.1.50 கோடி செலவில் எண்டோ அல்ட்ரா சவுண்ட் என்ற நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது.

இந்த நவீன கருவி குறித்து இரைப்பை, குடல், கல்லீரல் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.ரேவதி கூறிய தாவது:

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் எண்டோஸ்கோப்பி, அல்ட்ரா சவுண்ட் கருவிகள் தனித்தனியாக இருக்கின்றன. இந்த மருத்துவமனையில் முதல் முறையாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு ரூ.1.50 கோடி செலவில் எண்டோ அல்ட்ரா சவுண்ட் என்ற நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது. இரண்டு கருவி கள் செய்யும் பணிகளை, இந்த ஒரு கருவி செய்துவிடும்.

வயிறு, கணையத்தில் புற்று நோய் இருப்பதை துல்லியமாகவும், விரைவாகவும் கண்டு பிடிக்க முடியும். இவைதவிர வயிற்று புண், கட்டிகள் போன்றவைகள் குறித்த பரிசோதனை களையும் எளிதாக செய்துவிட முடியும். இந்த நவீன கருவியின் மூலம் மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளின் பிரச்சினைகளைக் கண்டறிந்து விரை வாக சிகிச்சை அளிக்க முடியும். இவ்வாறு ரேவதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x