Published : 07 Apr 2018 02:37 PM
Last Updated : 07 Apr 2018 02:37 PM
பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்துபோல, காவிரி பிரச்னைக்காக, காங்கிரஸூடன் சேர்த்துக் திமுக போராட்டம் நடத்துவதா? என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான திமுகவுடன் காங்கிரஸ் போராட்டம் நடத்தியிருக்கிறது.
ஆனால், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் எதிராக போராடாமல் தமிழக காங்கிரஸ் வேறொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திமுகவுடன் கைகோர்த்து காவிரிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை எதிர்க்காமல், தமிழக காங்கிரஸ் திமுகவுடன் போராட்டத்தில் ஈடுபட்டு இரட்டை நிலைபாட்டை எடுத்துள்ளது ஏன்?
பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பதா? காங்கிரஸ் கட்சியை சேர்த்துக்கொண்டு போராட்டம் நடத்துவதா?”
என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT